Friday, 24 August 2007

Vairamuthu's song from Mozhi ...

காற்றின் மொழி, ஒலியா இசையா
பூவின் மொழி, நிறமா மணமா
கடலின் மொழி, அலையா நுரையா
காதல் மொழி, விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி, ஒலியா இசையா
பூவின் மொழி, நிறமா மணமா

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும்போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்

ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி, ஒலியா இசையா
பூவின் மொழி, நிறமா மணமா
கடலின் மொழி, அலையா நுரையா
காதல் மொழி, விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதற்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ...

No comments: